என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கைப்பை திருட்டு"
- ஜஸ்டின் வினோதினி தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
- ஆசிரியையின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
கோவை,
நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் பிரகாஷ் விமல் ராஜ். இவரது மனைவி ஜஸ்டின் வினோதினி (வயது 43). தனியார் பள்ளி ஆசிரியை. இவரது கணவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து ஜஸ்டின் வினோதினி அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது கணவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து இருந்தார். சம்பவத்தன்று இவர் இருதய சிகிச்சை பிரிவு அருகே கைப்பையுடன் அமர்ந்து இருந்தார்.
அப்போது உடல் சோர்வு காரணமாக தூங்கினார். அங்கு வந்த யாரோ மர்மநபர் ஜஸ்டின் வினோதினி வைத்து இருந்த கைப்பையை திருடி தப்பிச் சென்றனர்.
அந்த கைப்பையில் 1½ தங்க வளையல், ஓட்டுனர் உரிமம், ரேசன் கார்டு வாக்காளர் அட்டை, ஆதார் அட்டை, ஏ.டி.எம். கார்டு ஆகியவை இருந்தது. இது குறித்து அவர் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க நகையுடம் ஆசிரியையின் கைப்பையை திருடி சென்ற மர்மநபரை தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்